×

காஞ்சிபுரத்தில் குடும்ப நல வேட்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த குடும்ப நல வேட்பு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ள ஆரிய வைசியா சமாஜ திருமண மண்டபத்தில் வள்ளலார், வேதாத்திரி, மகரிஷி, பரஞ்சோதி பாபா ஆகியோரின் வழியினை பின்பற்றி, சென்னை புழல் பகுதியை தலைமை இடமாகக்கொண்டு இயங்கி வரும் கருணை நெறிவளர் அறக்கட்டளை சார்பில், குடும்ப நல வேட்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், 61 தம்பதிகளுக்கு நிறுவனர் தயவு பிரபாவதி அம்மையார், கணவன் – மனைவியிடையே ஒற்றுமை, அன்பு, பாசம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் தன்மை நீடித்திட, புனித தன்மை ஓங்கி வளர்ந்திட செயல் முறை ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் செந்தாமரைச்செல்வி, சிவராஜ், மாலதி, மலர்கொடி, உமாராணி ஆகியோர் செய்திருந்தனர். இந்த, தயவு பிரபாவதி அம்மையார் வருடதோறும் இதுபோன்ற ஆன்மீக விழிப்புணர்வு முகாம்கள் மாவட்டம் தோறும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post காஞ்சிபுரத்தில் குடும்ப நல வேட்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram West Raja Road ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...